மங்கலக்கரை புதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி திமுக பெண் கவுன்சிலர் போராட்டம்

காரமடை நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறி திமுகவை சேர்ந்த கவுன்சிலர் நித்யா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தேக்கம்பட்டி பகுதியில் இருந்து குடி தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் காரமடை நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

முறையற்ற குடிநீர் வினியோகம் குறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுவதாக குற்றம்சாட்டி திமுக-வை சேர்ந்த கவுன்சிலர் நித்யா மங்கலக்கரை புதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி அமர்ந்து இன்று (பிப்.13) போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் உள்ளூர் மக்களும் இணைந்து கொண்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட நித்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வநியோகம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...