கோவை கோனியம்மன் கோயில் திருவிழா - உள்ளூா் விடுமுறை அளிக்க எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு கோரிக்கை

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம் எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் கோனியம்மன் கோயில் டவுன்ஹாலில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்க வலியுறுத்தி எஸ்.எஸ். மக்கள் சேவை பணி அமைப்பு சார்பில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று (பிப்.15) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வா். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களின் தோ்த் திருவிழாவின்போது உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், கேரளத்தில் பிரபல பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு கோவையில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேபோல, கோவையின் முக்கிய கோயிலான கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...