இன்று உலக இட்லி தினம்!


உலகில் அனைத்து பொருட்களுக்கு, உயிரினங்களுக்காகவும் ஒரு தினத்தை வகுத்து அவற்றை பெருமைபடுத்தும் நாம், இந்த இட்லிக்காகவும் ஒரு தினத்தை ஒதுக்கியுள்ளோம்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாததுமான ஒரு உணவு என்றால் அது இட்லி தான். 

ஆரம்ப கட்டத்தில் தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் பிரசித்து பெற்று விளங்கிய இட்லியின் பெருமை நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது.

இன்று உடலில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கும் பலரும் தினமும் ஒரு வேளையாவது வயிறாற இட்லியை சாப்பிடுகின்றனர். அதிலும் தமிழகத்தில், காலை சிற்றுண்டியாக இட்லி சாப்பிடாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறலாம்..! 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி முதல் உலக இட்லி தினம கொண்டாடி வருகிறோம்.

ஆண்டு தோறும் மார்ச் 30ம் நாள் இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக பல சமயற்கலைஞர்கள் வித விதமான இட்லியை தயாரித்து காட்சிப்படுத்துகின்றனர். அந்த வகையில், நாமும் இன்று ஒரு வேளை உணவாக இட்லி சாப்பிடலாமா?

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...