உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 2-வது நிகழ்வாக 16-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் அடையாளமாக கருதப்படும் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.



முன்னதாக கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றம் பகுதியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...