உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 2-வது நிகழ்வாக 16-ம் தேதி கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் அடையாளமாக கருதப்படும் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.



முன்னதாக கோவிலில் வேள்வி வளர்த்தப்பட்டு மாரியம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றம் பகுதியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...