திமுக அரசின் சாதனைகளுக்கு பெண்கள் மிக பெரிய ஆதரவு - பொள்ளாச்சியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமி பேட்டி

திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1715 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி அங்குள்ள வாக்குசாவடி அதிகாரிகளிடமும், திமுக முகவர்களிடமும் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி, காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் கடந்து 3 ஆண்டுகளாக திமுக அரசு செய்த திட்டங்களுக்கும், சாதனைக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...