நமக்கான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் - கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சு

இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வெள்ளிக்கிழமை இன்று (ஏப்ரல்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினர்.



இந்நிலையில், கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம், கோவை லாலி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் இது குறித்து, விளையாட்டு மேம்பாட்டு துறை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் கூறுகையில், இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மக்கள் தொகையிலும், சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம், மேம்பால பணிகள், மெட்ரோ திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக அனைத்து கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய நாளில் நமக்கு தேவையான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...