ரூட்ஸ் நிறுவனம் சார்பில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

கோவை, பந்தைய சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.  



மேலும், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் அதற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டதை அடுத்து, ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதியில் கழிப்பிடம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி செய்து கொடுக்க உறுதியளித்தது.

 

இதற்கு, கோவை ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.   

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...