கோவை போத்தனூரில் பெண்ணிடம் ரூ.7,90,500 ஆன்லைன் மோசடி

கோவை போத்தனூரை சேர்ந்த ஜெயம்மாளிடம் ஆன்லைன் மூலம் ரூ.7,90,500 மோசடி செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் ரயில் நகரை சேர்ந்தவர் ஜெயம்மாள்(48). இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அதில், உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து விவரங்களை தேடினார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நீங்கள் டெலிகிராம் குழுவில் இணைந்து நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறினார். 

இதனை நம்பிய ஜெயம்மாள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.7,90,500 செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த விதமான லாப தொகையும் கிடைக்கவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயம்மாள் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மொத்தமாக ரூ. 10 லட்சம் செலுத்தினால் மட்டுமே லாபம் மற்றும் அசல் தொகையை திரும்ப பெற முடியும் என தெரிவித்துள்ளார். மொத்தமாக அந்த மர்ம நபர் ரூ. 7,90,500ஐ ஏமாற்றி விட்டார்.

பின்னர் ஜெயம்மாள் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஜூன்.6 புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...