கோவையில் படுகொலை செய்யப்பட்ட பாரூக் நினைவாக உருவப்படம் திறப்பு

கோவையில் கடந்த மாதம் பாரூக் எனும் வாலிபர் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் நினைவாக திராவிட விடுதலைக் கழகம் சார்பில் உருவப் படம் திறப்பு விழா கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இதனை, திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், பாரூக்கின் கொலை குறித்தான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் சிறந்த புலனாய்வு செய்து கொலை செய்ய தூண்டியவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு திராவிட விடுதலைக் கழகமும் உறுதுணையாக இருக்கும். 



பெரியார் இயக்கம் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும். பெரியார் இயக்கமும், முஸ்லீம் சமுதாயமும் ஒரு நல்லிணக்கமாக இருந்த உறவை தற்போது மத தூய்மை வாதம் பேசுகிற வெறி அமைப்பினர் ஊட்டிய காரணத்தினால் பெரிய அச்சம் ஏற்படுகிறது.

இந்துத்துவ ஆட்சி நடக்கிற வேலையில் இந்த கொலை வழக்கு திசை திரும்பி விடுமோ என்ற எண்ணம் நிலவுகிறது. இருந்தும் இந்த கொலை வழக்கில் சம்பந்தம் உடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எவ்வித பாதிப்பும் இஸ்லாமியர்களுக்கும் பெரியார் திராவிட கழகத்திற்கும் ஏற்படாது என்றார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...