கோவை மேயர் பதவிக்கு போட்டி: சீனியர் கவுன்சிலர்கள் சிலர் தீவிர முயற்சி

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய மேயர் பதவிக்கு சீனியர் கவுன்சிலர்கள் சிலர் போட்டியிட முயற்சி செய்கின்றனர். இதற்காக சென்னையில் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க காத்திருக்கின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்ற சில சீனியர் கவுன்சிலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியுள்ளனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (ஜூலை 3) கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உடல்நலக் குறைவு காரணமாக மேயர் ராஜினாமா செய்ததாகத் தெரிவித்தனர். கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வேறு ஒருவர் மூலமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பனா ஆனந்தகுமார் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். அவர் 19வது வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காலியாகியுள்ள மேயர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், சில சீனியர் கவுன்சிலர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னையில் முக்கிய தலைவர்களை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...