கோவை: வீட்டில் 62 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - மூவர் கைது

கோவை சின்னவேடம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 62 கிலோ புகையிலை பொருட்கள் சரவணம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் உடையாம்பாளையம் ரோடு சின்னவேடம்பட்டி பாரதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜூலை 12 அன்று சரவணம்பட்டி போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, விமல், ஹான்ஸ், கணேஷ் போன்ற பிராண்டுகளின் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (45), கணபதி ராஜீவ் காந்தி ரோட்டைச் சேர்ந்த பாலாஜி (35) மற்றும் கணபதி மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் ஆவர்.

போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...