கோவை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்தம் - நரிக்குறவர் குடும்பம் தீக்குளிக்க முயற்சி

கோவையில் வீட்டை விட்டு வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக கூறும் நரிக்குறவர் குடும்பம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது. போலீசார் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற நரிக்குறவர் பெண்ணின் தங்கை, வேறு இனத்தைச் சேர்ந்த விஜில்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், விஜில்குமார் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்க விடாமல், வெளியேறுமாறு நிர்பந்தித்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாதா தனது குடும்பத்தினருடன் பேருந்து நிலையத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இன்று, தங்கள் வீட்டிற்கு சொந்தமான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சுஜாதாவும் அவரது குடும்பத்தினரும், தங்கள் வீட்டை மீட்டுத் தரக்கோரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...