பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு கட்டுமானத்தில் தரமற்ற கலவை: பழங்குடியினர் புகார்

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அஸ்திவார பணிகளில் சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கலவை பயன்படுத்தப்படுவதாக பழங்குடியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எருமப்பாறை மற்றும் கூமாட்டி ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த குடியிருப்புகளின் அஸ்திவார பணிகளில், சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கலவை பயன்படுத்தப்படுவதாக மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யாவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



பொதுவாக, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் மிக முக்கியமானது. சிமெண்ட் கலவை பயன்படுத்தினால் கட்டிடம் உறுதியாக இருக்கும். ஆனால், தற்போது கட்டப்படும் குடியிருப்புகளில் கற்களை அடுக்கி, அதன் மீது சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற செம்மண் கலவை பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மலைப்பிரதேசங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், இங்கு கட்டப்படும் வீடுகள் குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விடுகின்றன. இந்நிலையில், தரமற்ற கலவை பயன்படுத்தப்பட்டால் கட்டிடங்கள் வலிமை இழக்கும் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...