கோவை மாநகராட்சி ஆணையர் மழைக்கால டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கொசு உற்பத்தியை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆணையர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடிப் பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால், மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினசரி குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்படும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், கொசுக்கள் பெருக்கத்தை முற்றிலும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...