கோவை திருவள்ளுவர் நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

கோவை திருவள்ளுவர் நகரில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உலா வந்தன. ஒரு யானை குடியிருப்பாளர்களை தாக்க முயன்றது. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று இரவு திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்தன. இந்த சமயத்தில், ஒரு வீட்டின் முன் கேட்டில் நின்றுகொண்டிருந்த குடியிருப்பாளர்களை ஒரு யானை திடீரென தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக, அனைவரும் வேகமாக வீட்டிற்குள் ஓடி உயிர் தப்பினர்.



இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் தங்கள் கைபேசிகளில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கு முந்தைய நாள், தடாகம் தண்ணீர் பந்தல் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஓலைக் குடிசையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...