உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்த கண்காட்சி நடைபெற்றது.


உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு அரசு பொது நூலகத்துறை, நியூ செஞ்சுரி புத்தகநிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்த கண்காட்சியை நடத்தியது.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார். 27 ஆண்டுகளை எப்படி சிறையில் கழித்தீர்கள் என்று கேட்டதற்கு. புத்தகங்கள் வாசித்தேன் என்றார். அவர் சிறைக்குள் இருந்தபோதுதான் காந்திஜி எழுதிய சத்திய சோதனையை படித்து முடித்தார். இந்திய சுதந்திரத்திற்காக போராடி தூக்கு மேடை ஏரிய பகத்சிங் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

அவர் தூக்கிலிடப் படுவதற்கு சற்று முன்னர் காவலர்கள் அவரை தூக்கு மேடைக்கு அழைத்து செல்ல வந்தார்கள். அவர் லெனின் எழுதிய அரசும் புயரட்சியும் என்ற நூலை படித்துக் கொண்டு இருந்தார். அழைத்து செல்ல வந்த காவலர்களிடம் சற்றுப் பொறுங்கள் இந்த நூலில் இன்னும் நான்கைந்து பக்கங்கள்தான் இருக்கிறது. அதை படித்து முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார். புத்தகங்கள் எவ்வளவு சிறப்புக்கு உரியது என்பதற்கு பகத்சிங் ஒருவரே போதும். அவர் அந்த சின்ன வயதிலேயே நான் ஏன் நாத்திகனானேன் என்ற சிறு நூலை எழுதினார்.ஆங்கில ஆரசு ஆடிப்போனது.இது போல் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என கவிஞர் சிதம்பரநாதன் பேசினார். 

வரும் 29ம் தேதிவரை நடைபெறும் இந்த கண்காட்சியிலும், நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள நியு செஞ்சுரி புத்த நிறுவனத்தில் 10 % முதல் 50% சதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...