கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு வரவேற்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாட்டம்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது. இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.



2009ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2020ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை எனவும், பட்டியல் வகுப்பினர் வரையறையில் இருந்து உள்பிரிவுகள் விலக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு, உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடையில்லை என அறிவித்தது.



இத்தீர்ப்பை வரவேற்று, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி செந்தில், புரட்சி கழக முன்னணி மலரவன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் காமராஜ், கோவில்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...