உடுமலையில் தீரன் சின்னமலை நினைவு தினம்: பொள்ளாச்சி எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மரியாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொள்ளாச்சி எம்.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 219வது நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரவி மற்றும் மாவட்டச் செயலாளர் ரகுபதி ராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், உடுமலை நகரச் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.



மேலும், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மெட்ராத்தி தங்கராஜ், அப்பர் குரூப் சேர்மன் இளங்கோ, சபாபதி, வசந்தம் புக்ஸ் பெரிய தம்பி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய வீர தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தியது, தீரன் சின்னமலையின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...