பங்கு சந்தை முதலீட்டில் ரூ.34 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

கோவையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் அவருக்கு வந்ததாகவும், இதனை நம்பி அவர் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அருண் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சம் அனுப்பியுள்ளார்.

லாபத் தொகை குறித்துக் கேட்டபோது பணம் முதிர்வு அடைவதாகத் தெரிவித்ததாகவும், பின்னர் லாபத் தொகையையும் முதலீட்டுத் தொகையையும் திரும்பக் கேட்டபோது தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவல்களின் அடிப்படையில் துடியலூரைச் சேர்ந்த தனசேகரன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இருவரை ஜூலை 1 அன்று கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலைப் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...