கருணாநிதி நூற்றாண்டு விழா: கோவையில் திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் இருசக்கர வாகன பந்தய போட்டிகள் மற்றும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பந்தய போட்டிகள் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் ஆனைகட்டி மதன் வரவேற்று பேசினார்.

ஒன்றிய துணைச் செயலாளர்கள் எம்.ஆர்.டி செல்வராஜ், சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் கே.சி.கே.சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தக்குமார், திருநாவுக்கரசு, கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முன்னதாக கோவை சின்னதடாகம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட துணை அமைப்பாளர் வே.சூரியன்தம்பி ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MAR.K.ஹக்கீம் தலைமை வகித்தார். இதில் இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர்கள் பா.விக்னேஷ், க.நாகராஜ், பி.கே.அருணாச்சலம், உதயநிதிபாபு, மு.மனோஜ் ஆகியோரது முன்னிலை வகித்தனர்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பாளராக கலந்துக்கொண்டு கொடி அசைத்து இருசக்கர வாகன பந்தய போட்டிகளையும், உறுப்பினர் சேர்க்கையினையும் துவக்கி வைத்தார்கள்.



இரு நிகழ்ச்சிகளிளும் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் அசோக்பாபு ஆறுக்குட்டி, செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக், சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.என்.ஜி.புதூர் ஆனந்தன், சூற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ் பிரசாத், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், மகளிர் அணி பிரபாவதி, சாந்தி, பிரேமா, மருதமலை சரவணக்குமார், சிறுபாண்மையினர் நல உரிமை பிரிவு முராது அலி, இளைஞர் அணி அருண், அசோக் பிரபு, சுகுமார், பிரபு, திலீப், பிரவின் ராஜ், அசோக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் இளைஞர் அணி ஜெகன் பிரசாந்த் நன்றி கூறினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...