பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டம்: தனியார்மயக் கொள்கையை கைவிட வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசின் தனியார்மயக் கொள்கையால் கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று எச்சரித்து, அக்கொள்கையை கைவிட வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செப்டம்பர் 17ஆம் தேதி சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதாகவும், அதனை ஒன்பதாவது மாநில பிரதிநிதித்துவ பேரவை சிறப்பு மாநில மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழக அரசின் தவறான தனியார்மயக் கொள்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் சுங்க வசூலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 3,500 சாலைப் பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.



"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்" என்று அம்சராஜ் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் சாலைப் பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அம்சராஜ் தெரிவித்தார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...