கோவை இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: மூளைச்சாவுக்குப் பின் 5 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்பாடு

கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பெற்றோரின் சம்மதத்துடன் 5 உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவை காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஸ்ரீராம் என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோரின் முடிவின்படி, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.


கடந்த ஆகஸ்ட் 3 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி விழுந்த ஸ்ரீராம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 4 அன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.


தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 5 அன்று அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றில் கணையம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.


இதன் பின்னர், ஸ்ரீராமின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் Dr. அ.நிர்மலா உள்ளிட்ட மருத்துவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த உன்னதமான உடல் உறுப்பு தானம் மூலம் பல உயிர்கள் காக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...