ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் நெடுங்குன்று பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ் தேஜா IFS நெடுங்குன்று பழங்குடியினர் கிராமத்தில் சாலை அமைப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். மனித-விலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ் தேஜா IFS அவர்கள் இன்று நெடுங்குன்று பழங்குடியினர் கிராமத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, கிராமத்திற்கு செல்ல சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.

நெடுங்குன்றில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, இரவு நேரங்களில் மனித-விலங்கு மோதலை தவிர்க்க வேண்டி, குறுக்குவழிகளைத் தவிர்த்து வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். இது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.



பின்னர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி சரகத்தில் மனித-விலங்கு மோதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள SMART VIRTUAL FENCING (ஸ்மார்ட் விர்ச்சுவல் வேலி) அமைப்புகளை ஆய்வு செய்தார். இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். மேலும், இது தொடர்பான மக்களின் கருத்துக்களையும் (feedback) கேட்டறிந்தார்.



வால்பாறை மற்றும் மானாம்பள்ளி பகுதிகளில் வலசை யானைகளின் வருகை தொடங்கியுள்ளதால், மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மனித-விலங்கு மோதலைக் கட்டுப்படுத்த வனத்துறையுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...