சேரகுலவேளாளர் சமூகத்திற்கு சலுகைகள் வழங்க கோரிக்கை: தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75வது பேரவை கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டும் சலுகைகள் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேரமான் பெருமாள் நாயனாரின் 94-வது குருபூஜை வழிபாட்டு விழா மற்றும் தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் 75 ஆவது பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சேரகுல வேளாளர் சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேரகுல சமூக பெண்கள் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றினர். இந்த நிகழ்வை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



பேரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் N.S. மணி, "சேர குல வேளாளர் சங்கம் சார்பில் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நீதியரசர் மோகன் அவர்களின் பரிந்துரைப்படி இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இதனால் இந்த சமூகத்தினர் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இச்சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

சேரகுலவேளாளர் சமூகத்திற்கு உரிய சலுகைகள் வழங்கப்படாததற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...