கோவை ரேஸ்கோர்ஸில் அறிமுகமான புதிய ரோந்து பைக்: சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் தகவல்

கோவை ரேஸ்கோர்ஸில் புதிய ரோந்து பைக் அறிமுகம் செய்யப்பட்டது. சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிய ரோந்து பைக்கை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், "'Smart Policing for Smart City' என்ற குறிக்கோளுடன் கோவை மாநகர காவல் துறை சரக்கத்திற்கு உட்பட்ட ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் ரோந்து பணியை எளிதாக்குவதற்காக, குமரகுரு இன்ஸ்டிடியூஷன்ஸ் மாணவர்களின் உதவியுடன் இந்த ரோந்து பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.

காவல் ஆணையர் மேலும் கூறுகையில், "தற்போது இந்த ரோந்து பைக் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாடுகளைப் பொறுத்து கோவை மாநகரில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பகுதிகளான வாலாங்குளம், உக்கடம், ஆர்எஸ் புரம், குறிச்சி உள்ளிட்ட 6 பகுதிகளில் 6 ரோந்து பைக்குகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.



இந்த ரோந்து பைக் Public Address System, Flashlight, GPS உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் வாகனமாக உள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், குறிப்பிட்ட நேரம் இல்லாமல் இரவு பகல் என இரண்டு நேரங்களிலும் ரோந்து பணியில் பயன்படுத்தப்படும்.

சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகள், வாகனத் தணிக்கை செய்யும் இடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வ.உ.சி மைதானத்தில் நேற்றிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள். மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரை பொறுத்தவரை சுதந்திர தின கொண்டாட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெறும்," என்று உறுதி அளித்தார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...