பொள்ளாச்சியில் 78வது சுதந்திர தின விழா: நகராட்சி தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் கொடி வணக்கம் பாடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.



மேலும், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக பொள்ளாச்சி நகராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே விரைந்து தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் கணேசன், துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் வாக்கி டாக்கிகளை வழங்கி புதிய தொடர்பு முறையை தொடங்கி வைத்தனர். இந்த சுதந்திர தின விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...