பொள்ளாச்சியில் 78வது சுதந்திர தின விழா: நகராட்சி தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் கொடி வணக்கம் பாடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.



மேலும், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக பொள்ளாச்சி நகராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே விரைந்து தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் கணேசன், துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் வாக்கி டாக்கிகளை வழங்கி புதிய தொடர்பு முறையை தொடங்கி வைத்தனர். இந்த சுதந்திர தின விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...