பொள்ளாச்சியில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் கைது

சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சியில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: பொள்ளாச்சியில் சுதந்திர தினத்தன்று மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.



இந்நிலையில், பேரணி நடத்த கொண்டு வந்த டிராக்டர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் திடலில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட விவசாயிகள், "விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த முயன்ற எங்களை போலீசார் அராஜகத்துடன் நடந்து கொண்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...