கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, கல்வி கொடை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை அன்னூர் பகுதியில் உள்ள காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. சுதந்திர தின விழா, மரம் நடுவிழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கொடை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இது கொண்டாடப்பட்டது.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுச்செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன், டாக்டர் சி.ராதகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதியரசர் கற்பக விநாயகர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடை வழங்கியதுடன், மரம் நடு விழாவையும் துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்திரம் தொடக்க உரையாற்றினார். துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் ஜான்கிருஸ்டோபர், விஜய் ராவ், டிரவல்ஸ் ரமேஷ், ராமஜெயம், சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் அப்பு, விக்னேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் எம்.கே.துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், கவுன்சிலர் ரோஜபாலு, சுமதிராஜேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...