உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் 78-வது சுதந்திர தின விழாவை நேதாஜி மைதானத்தில் கொண்டாடியது. விழாவில் தேசியக் கொடியேற்றம், அணிவகுப்பு மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் ராணுவ நல சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் நீலகண்டன் தேசியக் கொடியேற்றினார்.



முன்னதாக, நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சியில் நேதாஜி நடைப்பயிற்சி நிர்வாகிகள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள்,



இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.





மேலும், ஓவியர் கனிமொழி என்ற மாணவி 78 சுதந்திர வீரர்களின் உருவப்படங்களை வரைந்து காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தின் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சிவகுமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...