கோவை அரசு மருத்துவமனையில் சிசிடிவி பழுது, கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்- ஏபி முருகானந்தம்

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, சிசிடிவி கேமராக்கள் பழுது மற்றும் கழிப்பிட வசதி இல்லாமை குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் இருப்பிட மருத்துவரிடம் சென்று விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சிபிஐ விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கோவை அரசு மருத்துவமனையில் 200 சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அவை அனைத்தும் வேலை செய்யவில்லை என்றும் முருகானந்தம் தெரிவித்தார். மேலும், கழிப்பிட வசதி இல்லை என பயிற்சி மருத்துவர்கள் கூறுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இரத்தக்கறை படிந்த துணிகளை எடுக்க கூட ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

சுகாதார அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முருகானந்தம், சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.



Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...