பொள்ளாச்சியில் புற்றுநோய் சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம்

பொள்ளாச்சியில் மிராக்கிள் ஒருங்கிணைந்த சுகாதார மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் இணைந்து புற்றுநோய் சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து 40 மருத்துவர்கள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ள மிராக்கிள் ஒருங்கிணைந்த சுகாதார மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது.



இந்தியா முழுவதிலிருந்து சுமார் 40 மருத்துவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று, புற்றுநோய்க்கான புதிய மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர். உணவு கட்டுப்பாடு, பாரம்பரிய நவதானிய உணவின் முக்கியத்துவம், பழவகைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.



மேலும், அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் பற்றியும், அவற்றிற்கான தீர்வுமுறைகள் குறித்தும் விவாதித்தனர்.

மிராக்கில் மருத்துவ மையத்தின் நிறுவனர் முனைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில், புற்றுநோய் மருத்துவ நிபுணர்களான டாக்டர் பிரதீப், டாக்டர் அய்யப்பன், டாக்டர் சயைத்தாகிர், டாக்டர் ரமேஷ்கௌரங், டாக்டர் சரண்யன், டாக்டர் ஸ்ரீகுமார் ஆகியோர் உரையாற்றினர்.



பொள்ளாச்சி NIA கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியான மிராக்கில் ஒருங்கிணைந்த சுகாதார மையம், உலகத்தரம் வாய்ந்த, பக்க விளைவுகள் அற்ற புற்றுநோய் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக ஆன்கோ தெர்மியா என்னும் புற்றுநோய் சிகிச்சை இம்மையத்தில் வழங்கப்படுகிறது. கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவர்கள் இந்த சிகிச்சைகள் குறித்து விவாதித்து பயனடைந்தனர்.

இக்கருத்தரங்கில் NIA கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் C. இராமசாமி, NIA கல்வி நிறுவனங்களின் முதன்மை மனிதவள அலுவலர் முனைவர் S.V. சுப்பிரமணியன், மிராக்கில் முதுநிலை மருத்துவ அலுவலர் டாக்டர் R. தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை NIA கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் S. நாகராஜன், மிராக்கில் மேலாளர் G. ரமேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...