வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலானது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் அதிகளவில் நுழைந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஐயர்பாடி பகுதியில் சாலை ஓரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சிறுத்தையைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், தாங்களாகவே சிறுத்தையை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...