கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து பாராட்டு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலைஞரின் சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி, கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறப்பாக செயல்பட்டதை நினைவு கூர்ந்தனர்.

கலைஞரின் முக்கிய சாதனைகளான கைரிக்சா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள், கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் போன்றவற்றை பாராட்டி பேசினர்.



கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் M.K. Stalin அவர்களின் முயற்சியால் ஒன்றிய அரசு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக முதலமைச்சருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...