கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு தேர்வு

கோவை பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் முன்னேற்றத்திற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி பீளமேடு வார்டு எண் 26க்குட்பட்ட பயணியர் மில் ரோட்டில் உள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சேவியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 27 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக திருமதி பிரியா அவர்களும், 24 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.



"நம் பள்ளி நம் பெருமை" என்ற கோஷத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் மாணவர்களை வளர்ப்பது, 100% தேர்ச்சி பெற வைப்பது, விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்குவிப்பது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும், மாதாந்திர கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் கலந்து கொள்ள வைப்பது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பது, மாணவர்களின் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.



இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...