டிசம்பர் 31, 2024-க்குள் 2000-க்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்ய வேண்டுகோள் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் 2000-க்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு பெயர் பதிவு செய்ய இயலாது என எச்சரித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, 2000-ஆம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவுச்சட்டம் 2000-ன் விதிகளின்படி, 2000-ம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு 2000-க்கு முந்தைய பிறப்புகளை நிரந்தரமாக பதிவு செய்ய இயலாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில அரசால் 25 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இனி மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். 2017-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த இடம் சார்ந்த வார்டு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது, குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவணம் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / நற்சான்றிதழ் போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பெயர் பதிவு கால தாமத விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

நடப்பாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தையின் பெயரை கால தாமத பதிவுக் கட்டணமின்றி பதிவு செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS வெளியிட்டுள்ளார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...