பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

காரமடை அருகே பெள்ளாதி குளத்தில் மீன்பிடி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்து சர்ச்சை எழுந்தது. அதிகாரிகள் தலையீட்டால் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெள்ளாதி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்து வந்தது. கடந்த ஜூலை மாதத்துடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று பெள்ளாதி குளத்திற்கு மீன்பிடிக்க படகுகள் மற்றும் வலைகளுடன் வந்தனர்.

ஆனால், முந்தைய ஒப்பந்ததாரர் மோகன்ராஜ் என்பவர் அவர்களை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காரமடை போலீசார், மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு தரப்பினரும் இரண்டு நாட்களுக்கு பெள்ளாதி குளத்தில் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், யாரும் குளத்தில் மீன்பிடிக்காமல் இருக்க கண்காணிக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் பெரும்பாலான மீனவர்களின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால், ஒப்பந்த காலம் முடிந்ததால் மீன் பிடித்து விடலாம் என நினைத்து வலைகளுடன் வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...