அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை சரிவு: விவசாயிகள் ஏமாற்றம்

அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே இதற்கு காரணம் என தெரிகிறது.


Coimbatore: அன்னூர் சாலையில் உள்ள வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் சாலை வாழைத்தார் மையத்தில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஏலத்திற்கு 9,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 7,000க்கும் மேல் நேந்திரன் வாழைத்தார்கள் இருந்தன.

ஏலத்தில் நேந்திரன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம் 27 ரூபாய்க்கும் விற்பனையானது. கதளி வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும், அதிகபட்சம் 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த வாரம் கதளி வாழையின் விலை குறையாமல் இருந்தது.

பொதுவாக கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு நேந்திரன் வாழைக்காயின் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே விலை சரிவுக்கு காரணம் என தெரிகிறது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...