மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் - மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து உரையாற்றினார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் திருப்பதி மற்றும் காளிமுத்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார். பின்னர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உடுமலை கோட்டாட்சியர் கண்டிசன் நிலங்களுக்கு NOC வழங்குவதை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டித்தது. மேலும், உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் போலி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 28, 2024 அன்று கோவையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், Dharapuram ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...