கோவை சங்கனூரில் கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

கோவை சங்கனூர் அருகே கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. தூத்துக்குடி கூபா டைவிங் குழுவினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


Coimbatore: கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்ற இளைஞர், திருமணம் ஆகாத விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 11 அன்று மாலை, விஜயராகவன் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக தீயணைப்புத் துறையினர் தீவிரமாக உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், தூத்துக்குடியில் உள்ள கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் முத்து எடுக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 15 அன்று கோவை வந்தடைந்த கூபா டைவிங் குழுவினர், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடலை மீட்டு கிணற்றிற்கு மேலே கொண்டு வந்தனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் நான்கு நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களிடையே மது அருந்தும் பழக்கம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...