மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது

மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் கைது செய்யப்பட்டார். பல பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் பயணித்த கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக், தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு மெமோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணம் செய்த அப்துல் ரஜாக், ஒரு கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்ததாகவும், அவரை அருவருக்கத்தக்க வகையில் பார்த்ததாகவும், மேலும் அவர் மீது உரசி கொண்டே வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், அந்த ரயிலில் பயணித்த பல பெண்களும் இதே மாதிரி தங்களிடமும் அவர் நடந்து கொண்டதாக கூறி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அப்துல் ரஜாக் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...