திமுக பவள விழா: கோவை 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர்.



Coimbatore: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி துவக்கி வைத்தார்.

சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட விஸ்வாசபுரத்தில் 5-வது வார்டு திமுக, லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், முத்துஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தன. துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, சிறுபான்மை உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான், பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி, மாமன்ற உறுப்பினர் நவீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் குறித்து வார்டு செயலாளர் கண்ணன் கூறுகையில், "இந்த முகாமில் குழந்தைகள் பொதுநல பரிசோதனை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, ஆறாத புண் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண்களுக்கு சிகிச்சை, கை, கால், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆலோசனை, இருதய மாரடைப்பு சிகிச்சைகளுக்கான ஆலோசனை, பித்தப்பை கல் மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது," என்றார்.

முகாம் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த வார்டுக்கு உட்பட்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாமில் பயனடைய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மருத்துவ முகாமில் துணை செயலாளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...