திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 52 பயணிகள் உயிர் தப்பினர்

தாராபுரம் அருகே திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 52 பயணிகள் உயிர் தப்பினர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நள்ளிரவு ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க ஸ்டேரிங் அருகே தீப்பிடித்தது.

பேருந்தின் ஓட்டுனர் கணேசமூர்த்தி (வயது 55) சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை பைபாஸ் சாலையில் ஓரமாக நிறுத்தினார். அவர் உடனடியாக அனைத்து பயணிகளிடமும் தீப்பிடித்த விவரத்தைத் தெரிவித்தார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

பயணிகள் திருச்செந்தூர் செல்வதற்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டபோது, இடப்பற்றாக்குறை காரணமாக பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மாயவன், மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த பேருந்து தீ விபத்து சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...