கோவை ஈஷா மையத்தில் விசாரணை நிறைவு; நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்தது. அறிக்கை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கோவை எஸ்.பி கார்த்திகேயன் அறிவித்தார்.


Coimbatore: கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்ததாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். விசாரணை குறித்த அறிக்கை நாளை (அக்டோபர் 4) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 குழுக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈஷா மையத்தில் விசாரணை மேற்கொண்டன.

விசாரணையின் போது, ஈஷா மையத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களின் விசா உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடமும், துறவறம் பெற்றுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டாவது நாள் விசாரணையில் சுகாதாரத் துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஈஷா மையத்தின் மீதுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், ஈஷா மையம் கொடுத்திருக்கும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் எஸ்.பி. கார்த்திகேயன் கூறினார். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசுத் துறை வாகனங்கள் ஈஷா மைய வளாகத்திலிருந்து வெளியேறின.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...