கிணத்துக்கடவில் வாழைக்கன்று வாங்க மானியம் - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிட வாழைக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 மானியம் அளிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. இதில், தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடுவதற்கு, வாழைக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னையில் வாழை ஊடுபயிர் செய்ய, 30 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு, வாழைக்கன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு, ஒரு ஹெக்டேர் மட்டுமே வாழை கன்று மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதமும், பிற கிராமங்களுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கதளி மற்றும் நேந்திரன் என இரண்டு வாழைகன்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கன்றுகள் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி இன்று (அக்.3) வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...