உடுமலை அருகே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் கவனம் ஈர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் முருகேசன், உதவி தலைவர் சாதிக்பாட்ஷா, செயலாளர் சண்முக பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கண்காட்சியில் மாணவர்கள் செய்த செய்முறை மாதிரிகள், கலைப் பொருட்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களும் தங்களது கலைப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.



குறிப்பாக, இஸ்ரோ ராக்கெட்டுகளின் மாதிரி வடிவங்கள், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.





மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக் அமைப்புகள், இதயம், நுரையீரல், வனவிலங்கு சரணாலயம், நீர்வீழ்ச்சி, சூரிய குடும்பம் ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும் பார்வையாளர்களை வியக்க வைத்தன.



பழங்கால நாணயங்கள், மண்பாண்டங்கள், மரச்சாமான்கள், பீங்கான்கள், பித்தளை மற்றும் செம்புப் பொருட்கள், எடைக்கற்கள், நவரத்தின கற்கள், ருத்ராட்ச மாலைகள், பழைய வானொலிகள், தட்டச்சு இயந்திரங்கள், தொலைபேசிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பகத் சிலம்பம் மற்றும் களரி பயிற்சிப் பள்ளியின் பழங்காலப் போர்க்கருவிகளும் இடம்பெற்றிருந்தன.

பாலைவனம், குளிர் பிரதேசம், வெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் வளரும் தாவரங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகள், மலர்ச் செடிகள் ஆகியவற்றின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள், "பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படும் இஸ்ரோ ராக்கெட்டுகள், போர் விமானங்கள் மாதிரிகள், பழங்கால போர்க்கருவிகள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு களித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்று தெரிவித்தனர்.

ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...