திருப்பூரில் சிறுவர்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை: பெரியவர்களுக்கு இணையாக கொண்டாட்டம்

திருப்பூரில் சிறுவர்கள் தங்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை செய்து கொண்டாடினர். பெரியவர்களைப் போலவே சைக்கிள்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் சிறுவர்கள் பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளனர். தமிழகம் முழுவதும் தொழிலுக்கு சிறப்பு செய்யும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பெரியவர்கள் தங்கள் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேலை செய்யும் இடத்தை தூய்மை செய்து, இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களுக்கும் பூஜை செய்து வருகின்றனர்.

இதேபோல், பெரியவர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திருப்பூரில் சிறுவர்கள் தங்களது வாகனமான சைக்கிளுக்கு ஆயுத பூஜை செய்துள்ளனர்.



சைக்கிள்களை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் திருப்பூரில் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புதுமையான கொண்டாட்டம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...