கோவை: பொன்னூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை

கோவையில் தொடர் கனமழை காரணமாக, துடியலூர் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் செல்ல முடியவில்லை.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் அமைந்துள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையில் இருந்து பாயும் பொன்னூத்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கோவையில் ஏற்பட்டுள்ள இந்த கனமழையின் விளைவாக, பொன்னூத்து அம்மன் கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...