கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்று சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை குறித்து வலியுறுத்தப்பட்டது.


Coimbatore:

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் IQAC மற்றும் ஒளிரும் கோவை தன்னார்வ அமைப்பு இணைந்து “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 50 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டார்.

அவர் உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர தூய்மை மிக முக்கியமானவை என்றும், கோவையை ஆரோக்கியமான நகரமாக மாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், தூய்மை குறித்து சிறுவயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் முனைவர் சிஏ கைலாஷ் குமார் மற்றும் தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கிற்காக மாநிலம் முழுவதும் இருந்து 50 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கட்டுரைகள் வல்லுநர் குழுவின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

அவற்றில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனர் ஏ.எம்.சம்சு அலி பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு ரூ.15,000 முனைவர் பி.நரசிம்மன், இரண்டாம் பரிசு ரூ.10,000 மாணவி வி.சண்முகபிரியா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாணவிகள் எம்.மோகனா மற்றும் ஆர்.ஸ்ரீ லஷ்மி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை IQAC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒளிரும் கோவை அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...